ராஞ்சி, பிப். 2 - சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டில், அம லாக்கத்துறை மேற் கொண்ட கைது நட வடிக்கை காரணமாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், தனது ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, தங்களின் புதிய சட்டமன்றக் கட்சித் தலைவராக - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் துணைத் தலைவரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான சம்பாய் சோரனை தேர்வு செய்தனர்.
சம்பய் சோரன், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, ஆட்சியமைக்கவும் உரிமை கோரினார். ஆனால் 24 மணிநேரத்திற்கும் மேலாக சம்பாய் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி பாஜக வழக்கம்போல ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை உடைக்கவும், எம்எல்ஏ-க்களை விலைபேசவும் தீவிர முயற்சி மேற் கொண்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ-க்கள் உறுதியுடன் ஒரே அணியாக நின்றதால், பாஜக-வின் முயற்சி பயனளிக்காமல் போனது.
இதையடுத்து, வேறு வழியின்றி ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன் முதல்வராக பதவியேற்க வருமாறு சம்பாய் சோரனுக்கு வியாழக்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் 12-ஆவது முதல்வராக 67 வயதான சம்பாய் சோரன் வெள்ளிக்கிழமை யன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், சம்பாய் சோரனுக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அடுத்த 10 நாட்களுக்குள் சம்பாய் சோரன் தலைமை யிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டுள் ளார்.